ஆந்திராவில் தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி ஆட்சி நடை பெற்று வரும் நிலையில், மக்கள் பணிகளை விட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை (முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் கட்சி) ஒடுக்கும் வேலையை மட்டுமே முதன்மை பணியாக ஆந்திர அரசு மேற்கொண்டு வருகிறது. நாள் தோறும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மீது ஏதாவதொரு குற்றச்சாட்டைக் கூறி வரு கிறது. கடந்த வாரம் திருப்பதியில் பக்தர்க ளுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு (நெய் மூல மாக) கலக்கப்பட்டு இருப்பதாக ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார்.
நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. மோடி அரசால் மக்கள் படாத பாடு பட்டு வருகின்றனர். நாட்டின் முக்கிய பிரச்சனை போன்று லட்டு பிரச்ச னையை விசாரணைக்கு உத்தரவிட்டும், நெய் வழங்கிய ஏ.ஆர்.டெய்ரி நிறுவ னத்தில் சோதனையும் மேற்கொண்டு வருகிறது ஆந்திர அரசு.
இந்நிலையில், லட்டு பிரச்சனையை தேசிய அளவில் மிக முக்கிய பிரச்சனை யாக திசை திருப்பும் வேலையில் பாஜக தீவிரமாகி இறங்கியுள்ளது. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவின் பொழுது, திருப்பதி லட்டு வழங்கப்பட்டது என அக்கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் மூலம் குற்றச் சாட்டை முன் வைத்துள்ளது பாஜக. இதுகுறித்து சத்யேந்திர தாஸ் கூறுகையில்,”திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குக் கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்தால் அது மன்னிக்க முடியாதது. வைணவர்கள், உணவில் பூண்டு, வெங்காயம் கூட பயன்படுத்துவ தில்லை. அப்படியிருக்க விலங்குக் கொழுப்பை பிரசாதத்தில் சேர்த்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது இந்து மத நம்பிக்கையை கேலிக் கூத்தாக்குவதற்கு சமம். சம்பந்தப் பட்டவர்கள் மீது மிகக் கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.
திருப்பதி லட்டை வைத்து தேசிய அளவில் அரசியல் பரபரப்பை ஏற் படுத்தும் பாஜகவின் இழிவான செய லுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.